2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரம்

Freelancer   / 2025 மே 19 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவிலின் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3ஆம் திகதி தொடங்கி, ஓகஸ்ட் 9ஆம் திகதி ரக்சா பந்தன் அன்று முடிவடையும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

யாத்திரைக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்யும். மேலும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலர்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் படிப்படியாக குறைந்து, எல்லைப்பகுதியில் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. 

இந்த சூழலில், இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்காக பக்தர்களை வரவேற்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X