Mayu / 2024 ஏப்ரல் 01 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது ஞாயிற்றுக்கிழமை (31) பா.ஜ.க.வின் மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது.
வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கி வைத்துள்ளார்.

இந்தநிகழ்வில், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பிரதமரும், அத்வானியும் அமர்ந்தநிலையஜல் கொண்டும், ஜனாதிபதி நின்றுகொண்டும் இருந்தபடி புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதியை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு என பல கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .