2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

உயிருடன் பிணவறை குளிரூட்டியில் வைக்கப்பட்ட நபர்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 21 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ கேஷ் குமார் என்பவர்   கடந்த வியாழக்கிழமை விபத்தொன்றில் சிக்கி படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.மேலும் இது குறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும்வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ஏழு மணி நேரத்திற்கு பின்னர்  மருத்துவமனைக்கு வந்து உடலை அடையாளம் கண்ட ஸ்ரீகேஷின் மைத்துனி மதுபாலா மற்றும் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.

ஆவணத்தை பொலிஸாருக்கு  சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை மதுபாலா கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை எடுத்து சோதித்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, ஸ்ரீகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் . இச் சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும்" என்று  ஸ்ரீகேஷின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .