Ilango Bharathy / 2023 மார்ச் 22 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச சார்பு நிறுவனமான ‘பாப்ஸ்கோ‘ நிறுவனம் மூடப்பட்டுள்ள நிலையில், அதன் ஊழியர்கள் ”தமது 65 மாத சம்பள நிலுவையை வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக சட்டப்பேரவைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம் புதுச்சேரியில் மூடப்பட்டிருக்கும் அனைத்து அரசு சார்பு நிறுவனங்களை உடனே திறக்கக் கோரியும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் பாப்ஸ்கோ ஊழியர்கள் கடலில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கடலிலில் இறங்கி போராட்டம் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago