A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை வானகரத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கூடியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக அவர் காலை தலைவர் கமல்ஹாசன் வந்தடைந்தார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்தனர். மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் சார்பு அணிகளின் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கமல்ஹாசனை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். இன்று மதியம் வரை பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago