Freelancer / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி எவ்வளவு நாட்கள் இருக்கிறாரோ அதுவரை நாம் எதுவும் செய்யத் தேவையில்லை என்றும் அவரே கட்சியை அழித்துவிடுவார் என்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான சிவ்ராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
பிரித்விபூர் சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அவர்,
காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி மூழ்கடித்து வருகிறார். முதலமைச்சராக அம்ரீந்தர் சிங் தெரிவு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்தில் நிலையான ஆட்சி இருந்தது.
சித்துவின் வேண்டுகோளை ஏற்று அவரை பதவியில் இருந்து நீக்கிய ராகுல்காந்தி, புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னியை நியமித்தார். இப்போது சித்துவும் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார்.
அங்கிருந்த நிலையான அரசு அகற்றப்பட்டு, நாடு ஆபத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் உறுதியற்ற தன்மை என்ற தீயில் வீசப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
15 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
1 hours ago