Freelancer / 2023 ஜூன் 20 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்களுடைய விருப்பத்துக்கு மாறாக காதலித்த ஜோடியை அப்பெண்ணின் தந்தை கொலைச் செய்து, முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் தொடர்ச்சியாக சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இது பெண்ணின் குடும்பத்திற்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜோடி ஒன்றாக சந்தித்துள்ளனர். அப்போது இருவரையும் கடத்தி சென்று சுட்டு கொலை செய்துள்ளனர். அத்துடன் இருவரின் உடலையும் முதலைகள் அதிகம் இருக்கும் சம்பல் நதியில் தூக்கி வீசியுள்ளனர்.
அதன்பின்னர் குடும்பத்தாருடன் தலைமறைவாகியிருந்த பெண்ணின் தந்தை, இரட்டைப் படுகொலையை ஒப்புக்கொண்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago