2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குடும்பத்தைக் கொன்ற சர்க்கரை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ‘யுவராஜ்‘. 42 வயதான அவரும் அவரது மனைவியும்  சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு  7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகள் நிதிஷா கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  2 ஆவது மகளுக்கும்  சக்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான தம்பதி, ‘குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்ளலாம்‘  என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு யுவராஜ், தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் மேட்டூர் அருகே உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்று தமது மகள்கள் இருவரையும் ஆற்றில் தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் 2 மகள்களும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் தம்பதியும் ஆற்றில் குதித்து தமது உயிரை மாய்த்துக் கொண்டனர்.

இச்சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .