A.K.M. Ramzy / 2021 ஜூலை 06 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

குண்டூர்:
ஆந்திரா மாநிலத்தில் வீட்டில் விளையாடி வந்த இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்துக்கொன்ற கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சாப்ரோல் மண்டலம், வேஜண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர். ரெபெல்லே கிராமத்தை சேர்ந்தபெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு (வயது10), (வயது 8)களில் இரு மகன்கள் இருந்தனர். கொரோனா முழு ஊரடங்கு காரணமாக கணவன், தனது சொந்த ஊரான வேஜண்ட்லா கிராமத்துக்கு வந்துள்ளனர்.
இந்தநிலையில் வேஜண்ட்லா கிராமத்திலிருந்து மனைவியின் சொந்த ஊரான ரெபெல்லா கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.
இரண்டு மகன்களையும் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு தாழிட்டுக் கொண்டு கட்டை, விறகு உள்ளிட்டவைகளால் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்து உதைத்துள்ளார்.
இதையடுத்து ஒன்றும் அறிந்திடாத பிஞ்சுகள் இரண்டும் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். பின்னர் அருகே உள்ள பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார். உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago