2026 மே 09, சனிக்கிழமை

கபில சந்திரசேன மரணம் : பிரேத பரிசோதனை இன்று

Freelancer   / 2026 மே 09 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழுவின் மூலம் பிரேத பரிசோதனையை முன்னெடுத்து, அது குறித்த அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் சடலம், கொள்ளுப்பிட்டி பேட்ரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நேற்று (08) காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .