Ilango Bharathy / 2022 மார்ச் 17 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஒன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பாடசாலைச் சிறுவர்கள் அதிக அளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இந்நிலையில் இந்தியாவில் சிறுவர்களிடம் தொலைபேசி ஏற்படுத்திய விளைவுகள் குறித்து மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவலொன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து சிறுவர்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கருத்துத் தெரிவிக்கையில்” 37.15 சதவீதமான சிறுவர்கள் தூங்குவதற்கு முன்னர் ஸ்மார்ட் தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனர் எனவும் அதில் 23.30 சதவீத சிறுவர்கள் படுக்கையில் வைத்து ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் ” அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
7 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
5 hours ago