2025 மே 08, வியாழக்கிழமை

சென்னை விமான நிலையத்தில் வெடி குண்டு மிரட்டலால் பரபரப்பு

Freelancer   / 2024 ஜூன் 17 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை விமான இயக்குனர் அலுவலகத்துக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், விமான நிலைய வாகன நிறுத்தும் இடம், விமான எரிபொருள்கள் நிரப்பும் இடம், சரக்கு பார்சல் ஏற்றும் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டநிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என்று சோதனையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X