Freelancer / 2024 ஒக்டோபர் 28 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில், ஞாயிற்றுக்கிழமை (27), நச்சுப் புகையை சுவாசித்து, இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன், ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காலை 10.30 மணியளவில், தொழிற்சாலையில் உள்ள ஒரு தொட்டியில் பிரிண்டிங் மற்றும் டையிங் தொழிலில் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட் ஆசிட் மாற்றப்பட்டபோது கசிந்த நச்சுப் புகையை, அங்கிருந்த ஒன்பது தொழிலாளர்கள் சுவாசித்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு தொழிலாளர்களில், நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
1 hours ago