Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெட்பர்ட்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டை கடற்கரையில் இருந்து சனிக்கிழமை மாலை 12 மீனவர்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படகில் இருந்த மீனவர் முனியராஜ் கடலில் தவறி விழுந்து காணாமல் போனார்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை சனிக்கிழமை இரவு வரை சக மீனவர்கள் தேடி வந்த நிலையில் கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மீன்வளத்துறை அதிகாரிகள், மெரைன் பொலிஸ் மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஆகியோரிடம் கடலில் மாயமான மீனவரை மீட்டுத் தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர் மழைக்கு மத்தியில் மீன் வளத்துறை, ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ், மற்றும் மண்டபம் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து படகுகளின் உதவியுடன் தொடர்ந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை நடுக்கடலில் தேடி வருகின்றனர்.
நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஹெலிகாப்டரை பயன்படுத்தி விரைவில் மாயமான மீனவரை மீட்க வேண்டும் என மாயமான மீனவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
3 hours ago