2026 மார்ச் 05, வியாழக்கிழமை

பகிடிவதைக்கு எதிராக ‘அண்ணா‘ புதிய உத்தரவு

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 02 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

”பகிடிவதையில் (Ragging) ஈடுபட மாட்டேன்” என மாணவர்கள் ஒன்லைனில் சத்தியப் பிரமாணப பத்திரம் ஒன்றைத்  தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கிலேயே  பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இச் சத்தியப் பிரமாணப்  பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்செய்தியானது மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .