Ilango Bharathy / 2023 மே 22 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 க்கும் மேற்பட்டோர் மாயமான சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கங்கை ஆற்றிலேயே இன்று இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த படகில் சுமார் 40 பேர் பயணித்துள்ள நிலையில் அதிக எடை காரணமாக படகு கவிழ்ந்துள்ளது.
இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் மீட்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 25 பேர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகின்றன.
43 minute ago
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
3 hours ago