Ilango Bharathy / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் இருந்து கோலாம்பூர் நோக்கி நேற்று முன்தினம் (02) மு.ப 11.45 மணியளவில் பயணிகள் விமானமொன்று புறப்படத் தயாரானது.
இந்நிலையில் விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் விமானத்தை சரிபார்த்த விமானி, அதில் இயந்திரக் கோளாறு இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து உடனடியாகசென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் விமானி தகுந்த நேரத்தில் இயந்திரக்கோளாறை கண்டுபிடித்துவிட்டதால் விமானத்தில் செல்ல இருந்த 159 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 167 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
31 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
31 minute ago
39 minute ago
1 hours ago