2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாவது நாளாக சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 28 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்,

விக்டோரியா மருத்துவமனை நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், சிகலாவுக்கு, தொடர்ந்து 3வது நாளாக கொரோனா அறிகுறிகள் இல்லை என்றும்,சசிகலா உடல்நிலை சீராகவுள்ளதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை தினத்தை எதிர்நோக்கி காத்திருந்த சசிகலாவுக்கு கடந்த 20ஆம் திகதி  உடல் நலக்குறைவு ஏற்பட்டது.மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில்   அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .