2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

15,82,201 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 24 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

நாடு முழுவதும் 15 இலட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்புமருந்து வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் எட்டாம் நாளில் மாலை 6 மணி வரை 15,82,201 பயனாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் எட்டாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொரோனா தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

27,776 முகாம்களில் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு இன்று காலை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.எட்டாம் நாளான இன்று நாடு முழுவதும் 15,82,201 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .