2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

33 பேரின் உயிரைப் பறித்த உல்லாசப் படகு

Ilango Bharathy   / 2023 மே 08 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உல்லாசப்படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம்  பரப்பனங்காடி கடற்கரை பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இரண்டு அடுக்கு கொண்ட குறித்த படகில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர் எனவும், திடீரென அப்படகு கவிழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை உலுக்கிய இவ் விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றமையே  காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X