A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
கொரோனாவில் இருந்து குணமடைந்த சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை யிலிருந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். தற்போது பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் அவரை கவனித்துக் கொள்கின்றனர். இதனால் சொகுசு விடுதியில் சசிகலா உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. ஒரு வாரம் தனிமைக்கு பிறகு சசிகலா வருகிற 7ஆம் திகதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.
காலை 7.30 அளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்டமான மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.பெங்களூருவில் சசிகலா தங்கி இருக்கும் விடுதியில் இருந்து அத்திப்பள்ளிவரை கர்நாடக மாநில அ.ம.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் புறப்படும் சசிகலா அன்று மாலை சென்னையை வந்தடைகிறார். சென்னை வந்ததும் அவர் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயலிலிதா நினைவிடம் தற்போது அரசின் பராமரிப்பில் உள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலா அதிரடி அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவார் என அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago