2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (05.04.2012)

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (05.04.2012)

மேடம்
கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். காரியங்கள் தங்கள் எண்ணம் போல் நிறைவேறும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
அஸ்வினி: உற்சாகம்
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
பெரியவர்களிடம் பேசும்பொழுது மரியாதையுடன் நடப்பது அவசியம். மாணவர்கள் படிப்பில் கவனம் அவசியம். உத்தியோகத்தில் டென்ஷன் அதிகமாகும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: துன்பம்
மிருகசீரிடம் 1, 2: அலைச்சல்


மிதுனம்
புதிய தொழில் வாய்ப்புக்கள் உண்டாகும். ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். உறவினர்களின் வருகை காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: செலவுகள்


கடகம்
உடல் நலக்குறைவுகள் காணப்படும். ஆண், பெண் நட்பில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: செலவு
ஆயில்யம்: கஷ்டம்


சிம்மம்
இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தாய் வழியில் வரவுகள் உண்டாகும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நலம்


கன்னி
நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குலதெய்வ வழிபாடுகள் செய்வீர்கள்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்



துலாம்
எடுக்கும் முயற்சிகள் தோல்வியடையும். வேண்டாத அலைச்சல், செய்யும் செயல்களில் தவறுகள் ஆகியவை காணப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
சுவாதி: தவறுகள்
விசாகம் 1, 2, 3: தோல்வி


விருட்சிகம்
வேண்டாதவர்கள் மற்றும் தீயவர்களின் நட்பு ஏற்படுதல், இதனால் நஷ்டமடைதல், இதனால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படுதல்.
விசாகம் 4: கஷ்டம்
அனுசம்: துன்பம்
கேட்டை: துக்கம்


தனுசு
அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும்.
மூலம்: லாபம்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்


மகரம்
கைவிட்டுப்போன பொருள் மீண்டும் கிடைத்தல், கடினமான பேச்சுவார்த்தைகளால் மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும்.
உத்திராடம் 2, 3, 4: கஷ்டம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும்;. தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். சில சமயம் பணத்தட்டுப்பாடுகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: கஷ்டம்



மீனம்
வீட்டில் திருட்டு போகலாம், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். வேண்டாத பேச்சுக்களால் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: பயம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .