2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (21.03.2013)

A.P.Mathan   / 2013 மார்ச் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (21.03.2013)

மேடம்
வீண் சிரமங்கள் உண்டாகும். உடல் நிலையில் தொய்வு காணப்படும். திருடர்களினால் பயம் ஏற்படும்.
அஸ்வினி : துன்பம்
பரணி : மயக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம் : பயம்


இடபம்
உடல் நிலை மோசமடைந்து காணப்படும். மனதில் குழப்பமான சூழ்நிலை உருவாகும். வாய் வார்த்தைகளினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: துக்கம்
ரோகிணி : குழப்பம்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
மனதளவில் கஷ்டம் ஏற்படும். மனதுக்கு பிடித்தமான விடயங்களில் மனதை செலுத்தி மகிழ்ச்சியடைவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்.
மிருகசீரிடம் 2, 3 : கஷ்டம்
திருவாதிரை : மகிழ்ச்சி
புனர்பூசம் : முயற்சிகள்


கடகம்
தலைவலி ஏற்படும். மனதில் பயம் காணப்படும். வீட்டைவிட்டு வெளியில் அலையும் சூழ்நிலை உருவாகும்.
புனர்பூசம் : பயம்
பூசம் : துன்பம்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
மனம் சஞ்சலம் அடைதல், வேண்டாத செலவுகளால் வேதனையடைதல். வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் காணப்படும்.
மகம்: குழப்பம்
பூரம்: செலவுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: பிரச்சினைகள்


கன்னி
அதிகாரிகளின் பேட்டி காணும் சூழ்நிலை. காரியங்கள் வெற்றியடைதல், அயல்நாட்டில் இருந்து செய்தி வருதல்.
உத்திரம் 2, 3, 4: பேட்டி
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
பிரயாணம் செல்லுதல், இதனால் லாபம். பொழுதுபோக்குகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். அப்பொழுது கவனம் தேவை.
சித்திரை 3, 4ஆம் பாதம் : இன்பம்
சுவாதி : லாபம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி


விருட்சிகம்
மேல் அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினைகள் தோன்றி மறையும். வேண்டாத உணவினால் பிரச்சினைகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: துக்கம்
கேட்டை: பிரச்சினை


தனுசு
வீண் அலைச்சல்கள் காணப்படும். செய்யும் செயல்களில் தவறுகள் உண்டாகும். முயற்சியிகள் தோல்வியடையும்.
மூலம்: அலைச்சல்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துக்கம்


மகரம்
நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் உண்டாகும். சுகமான உணவுகளால் மனம் மகிழ்ச்சியடையும். மனதளவில் அலைச்சல் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: இன்பம்
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: அலைச்சல்


கும்பம்
வேறு இடம் மாறுதல் உண்டாகும். சுவையான உணவு உண்ணுதல், பெண்களினால் மகிழ்ச்சிகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும். இதனால் மனது மகிழ்ச்சியடையும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். அதிக பண லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 4:  தரிசனம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி: லாபம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .