2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (29.10.2012)

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (29.10.2012)

மேடம்
உடல் நிலையில் மோசமான நிலை காணப்படும். மனதில் குழப்பமான சூழ்நிலைகள்  உருவாகும். மனதில் துக்கங்கள் உண்டாகும்.
அஸ்வினி : துக்கம்
பரணி : குழப்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் பதவியில் உள்ளவர்களின் பேட்டிகள் கிடைக்கப்பெறுவீர்கள். செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தழுவும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2: இன்பம்


மிதுனம்
உண்ணும் உணவில் வெறுப்பு காணப்படும். இதனால் வயிற்றில் பிரச்சினை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் வீணான மருத்துவ செலவுகள் காணப்படும். கவனம் அவசியம்.
மிருகசீரிடம் 2, 3: செலவுகள்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: துன்பம்


கடகம்
செய்யும் தொழிலில் மிகுந்த ஈடுபாட்டுடன் காணப்படுவீர்கள். இருந்த போதிலும் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். வெளிநாட்டில் இருந்து செய்திகள் வந்து சேரும். மகிழ்ச்சி  உண்டாகும்.
புனர்பூசம்: ஈடுபாடு
பூசம்: துக்கம்
ஆயில்யம்: துன்பம்


சிம்மம்
பெண்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். இல்லையெனில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். துன்பங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது. நிதானம் அவசியம்.
மகம்: துக்கம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: பிரச்சினை


கன்னி
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் உண்டாகும். தொழிலில் புதிய வழிமுறைகளை கையாண்டு வெற்றி காண்பீர்கள். இதனால் தனலாபங்கள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
தீயவர்களுடைய நட்புகளை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சிலவிதமான நஷ்டங்களை சந்திக்க நேரிடும். மேலும் சிக்கல்கள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துன்பம்
சுவாதி : சிக்கல்கள்
விசாகம் 1, 2, 3: துக்கம்


விருட்சிகம்
பிறருடைய உதவியை எதிர்பார்த்து கிடைக்காமல் போகலாம். இதனால் மனக்கசப்புகள் மற்றும் அலைச்சல்கள் காணப்படும். இருந்தாலும் சில காரியங்கள் வெற்றியை அடையும்.
விசாகம் 4ஆம் பாதம் : அலைச்சல்
அனுசம்: வெற்றி
கேட்டை: துன்பம்


தனுசு
புண்ணிய செய்திகள் வந்து சேரும். இதனால் மனம் அமைதியடையும். வயது மூத்தவர்கள் மற்றும் ஆலய தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அமைதி


மகரம்
குடும்பத்தில் உடன் பிறந்தவர்களின் வருகையினால் மகிழ்ச்சி உண்டாகும். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுவீர்கள். இதனால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: செலவு


கும்பம்
தேவையில்லாத பேச்சுகளால் மனக்கஷ்டங்கள் உண்டாகும். இதனால் வீண் அலைச்சல் காணப்படும். வீட்டில் களவுபோகும் சூழ்நிலைகள் உண்டாகலாம், எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அவிட்டம் 3, 4: மனக்கஷ்டம்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்


மீனம்
உடலில் உஷ்ணம் ஏற்பட்டு காய்ச்சல், தலைவலி ஆகியவை உண்டாகும். வீணான மனக்கசப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும்.
பூரட்டாதி 4ஆம் பாதம் : துக்கம்
உத்திரட்டாதி : தோல்வி
ரேவதி : துன்பம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .