2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.11.2012)

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (21.11.2012)


மேடம்
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை  இல்லையெனில் அவதிப்பட வேண்டி இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். சிக்கனம் தேவை. வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்
அஸ்வினி: துன்பம்
பரணி: கஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெறுப்பு


இடபம்
விழிப்புணர்வுடன் செயல்படுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். உடல் நலக்குறைவு இருந்தாலும் ஓரளவு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சல் உடையதாய் இருக்கும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: பயம்
மிருகசீரிடம் 1, 2: துக்கம்


மிதுனம்
உடல் அசவுகர்யத்தால் மருத்துவரின் ஆலோசனைகள் தேவைப்படும். சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில் இடையூறுகள் உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிஷம் 2, 3: சிரமம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: பயம்


கடகம்
கையில் பணபுழக்கம் அதிகரிக்கும். காரியத்தில் சாதனை அடைதல். வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டி காணும் சூழ்நிலைகள் உருவாகலாம்.
புனர்பூசம்: பேட்டி
பூசம்: சாதனை
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
தீய நட்பினால்  தேவையில்லாத நஷ்டங்கள் உண்டாகும்  குடும்பத்தில் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் முயற்ச்சிகள் தடைபடும்.
மகம்: துன்பம்
பூரம்: கஷ்டம்
உத்திரம் 1ம் பாதம்: சிக்கல்கள்


கன்னி
வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும் பணதட்டுப்பாடு ஏற்படும் .இதன க்ல்  வியாபாரத்தில அலைச்சல் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: கஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்


துலாம்
மனம் சஞ்சலமடையும். இல்லத்தில் திருட்டு பயம் உண்டாகும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும். இதனால் வீணாண சிரமங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிரமம்
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
வெளிநாட்டில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளை சந்தித்து பேட்டிகள் கிடைக்கும்.
விசாகம் 4: பேட்டி
அனுசம்: வெற்றி
கேட்டை: மகிழ்ச்சி


தனுசு
எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.  வீணான  அலைச்சல் காணப்படும் .
வேண்டாத பேச்சுகளால் மனசங்கடங்கள் உருவாகும். நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.
மூலம்: துக்கம்
பூராடம்: கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்


மகரம்
வெளியூரிலிருந்து செய்திகள்  வரும் இதனால் அலைச்சல்கள் காணப்படும் பணத்திற்கு தட்டுப்பாடுகள் காணப்படும். ஒரு சில இடங்களில் வெற்றிகள் கிடைக்கும்
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
முயற்சியில் தோல்வி உண்டாகலாம். வீண் அலைச்சல்கள் மற்;றும் துக்கம் காணப்படும். செய்யும் செயல்களில் தவறுகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: தோல்வி
சதயம்: துக்கம்
பூரட்டாதி 1, 2, 3: அலைச்சல்


மீனம்
புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தனித்தன்மையுடன் செயல்பட்டு லாபத்தை அதிகரிப்பீர்கள். குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவர்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: மகிழ்ச்சி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .