Editorial / 2026 பெப்ரவரி 06 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகரின் ரோவில்லே பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய இந்திய சமூக மையத்தில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலையை, கடந்த ஜன.12 அன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து திருடிச் சென்றுள்ளதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சுமார் 420 கிலோ எடையுள்ள இந்தச் சிலையின் கால்பகுதி வரை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அவுஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாத்மா காந்தியின் சிலை சேதமாக்கப்பட்டு திருடப்பட்டதற்கு (பிப். 3) கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விவகாரத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
”மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைத்து திருடப்பட்டதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இந்த விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் நாங்கள் கேள்வி எழுப்பியுள்ளோம். மேலும், மாயமான சிலையைக் கண்டுபிடிக்கவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலால் கடந்த 2021 ஆம் ஆண்டு பரிசளிக்கப்பட்ட இந்தச் சிலையை முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திறந்துவைத்தார். மேலும், திறக்கப்பட்ட சில மணிநேரங்களில் இந்தச் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
29 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
29 minute ago
4 hours ago
5 hours ago