Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுவிட்டரில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவருக்கு, கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை பதிலளித்தது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளத்தில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்த சுந்தர் பிச்சை, அண்மையில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து, பண்டிகையை கொண்டாடியதாகத் தெரிவித்தார்.
அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், தாங்கள் முதல் 3 ஓவர்களை பார்க்க வேண்டும் என, இந்திய வீரர்கள் ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி பதிவிட்டார்.
அதற்கு சுந்தர் பிச்சை, ஆமாம் பார்த்தேன், இந்திய வீரர்கள் அர்ஷதீப், புவனேஷ்வர் சிறப்பாக பந்துவீசி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், முகமது ரிஸ்வானை ஆட்டமிழக்கச் செய்ததாகக் குறிப்பிட்டு, நகைச்சுவையாக அளித்த பதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago