Editorial / 2023 ஜனவரி 02 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெய்ஜிங்:
இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக இருந்த வாங் இ-க்குப் பதில், புதிய வெளியுறவு அமைச்சராக கீன் கேங் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவுக்கான சீன தூதராக இருந்தவர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 13வது தேசிய மாநாட்டில் இவரை புதிய வெளியுறவு அமைச்சராக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. வாங் இ தற்போது சீன கம்யூனிச கட்சியின் மத்திய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து அமெரிக்காவின் 'The National Interest' என்ற பத்திரிகையில், 'சீனா உலகை எவ்வாறு பார்க்கிறது?' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில், பல்வேறு நாடுகளுடன் சீனாவுக்கு இருக்கும் உறவு, உறவுகளை வலுப்படுத்துவதில் அதற்கு இருக்கும் விருப்பம், சீனா மீதான முக்கிய விமர்சனங்களுக்கு அதன் விளக்கம் என பல்வேறு விஷயங்கள் குறித்துளைப் பற்றி கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா உடனான உறவு குறித்தும், எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கீன் கேங், ''இந்தியா உடனான உறவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. எல்லைப் பிரச்சினையைப் பொருத்தவரை, எல்லைகளைப் பாதுகாக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இருதரப்பும் விருப்பத்துடன் உள்ளன.'' எனத் தெரிவித்துள்ளார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago