2026 மே 14, வியாழக்கிழமை

இராட்சத காளானில் நடக்கும் இசைக் கச்சேரி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 27 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்கேரியில் இயற்கை சூழலில் இசையை ரசிக்கும் விதமாக அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளைமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இராட்சத காளானை போல் காட்சியளிக்கும் இந்த அரங்கம் தலைநகர் புடாபெஸ்டின் மையப்பகுதியில் உள்ள பூங்காவில் கட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளிக்கதிர்கள் நுழைவதற்காக அரங்கின் மேற்கூரையில் 100 துளைகள் இடப்பட்டுள்ளன. இரைச்சலின்றி இசையை  ரசிப்பதற்கு ஏற்றவாறு இங்குள்ள கண்ணாடி சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுமார் 40 அடி உயரம் கொண்ட இந்த 94 கண்ணாடி சுவர்களை இசையின் இயல்புகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும் வசதியும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .