Editorial / 2026 ஏப்ரல் 03 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, அந்தப் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான எரிபொருளே இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ட்ருகானினா என்ற இடத்தில் அமைந்துள்ள 'லிபர்ட்டி' எரிபொருள் நிலையத்தில், ஒரு வெகுமதி வழங்கும் நிறுவனம் இந்த அதிரடி இலவசத் திட்டத்தை அறிவித்தது. இலவசமாக எரிபொருள் நிரப்பிக் கொள்ள டஜன் கணக்கான வாகனங்கள் அந்தப் பகுதியைச் சுற்றி அணிவகுத்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெரிசலுக்கான காரணம்: குறித்த நிறுவனத்தின் நிறுவனர் பில்லி பீஸ்லி புனித வெள்ளியை (Good Friday) முன்னிட்டு இந்தச் சிறப்புச் சலுகையை அறிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கே முன்னுரிமை" என்ற அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், இன்று அதிகாலை முதலே 'லீக்ஸ் சாலை' பகுதியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பொருட்டும், இந்த இலவச விநியோகத் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காவல்துறையினர் அந்த நிறுவனத்திற்குப் பணித்தனர். இதனைத் தொடர்ந்து வாகன வரிசைகள் கலைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .