2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

ஈரானின் ஆயுத கிடங்கு மீது ‘பங்கர்’ குண்டு வீசியது அமெரிக்கா

Freelancer   / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ​ரானின் இஸ்​ப​கான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்' குண்டை வீசி​யது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரு​கிறது. ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள ராணுவ முகாம்​களை குறி வைத்து அமெரிக்க, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டுமழை பொழிந்தன.

மேலும் ஈரானின் இஸ்​ப​கான் நகரில் பூமிக்கு அடி​யில் அமைக்​கப்​பட்டு உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்​கர்’ குண்டை வீசி​யது. இந்த குண்டு பூமியை துளைத்​துச் சென்று ஆயுத கிடங்கை துல்​லிய​மாகத் தாக்​கியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்​துச் சிதறி தரைமட்​ட​மானது. இதுதொடர்​பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலை​தளத்​தில் வெளியிட்டிருக்​கிறார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .