Editorial / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த 2–3 வாரங்களில் ஈரானை மிகவும் கடுமையாக தாக்கப்போகிறோம். என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட உரையில் தெரிவித்தார்.
இன்றிரவு நான் சொல்லக்கூடியது என்னவென்றால், அமெரிக்காவின் அனைத்து இராணுவ இலக்குகளையும் நிறைவேற்றும் பாதையில் நாம் இருக்கிறோம். அவர்கள் இருந்த இடத்திலிருந்து முற்றிலும் பின்னடைந்து போகும் நிலைக்கு கொண்டு வருவோம்.
மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் ஈரானுடன் நடைபெறும் இந்த போர், அமெரிக்காவின் அடுத்த தலைமுறையினை பாதுகாப்பிற்கான ஒரு முதலீடாகும். ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஆயுதப் படைகள் விரைவான வெற்றியை அடைந்துள்ளனர்.
மேலும், அந்நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் அணுசக்தித் திறன்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள். எங்களிடம் நிறைய உள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, ஹோர்மூஸ் நீரிணை பகுதிக்கு இராணுவப்படைகளை அனுப்பி அதை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago