Freelancer / 2026 ஜனவரி 14 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் நாடு தழுவிய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினர் உட்பட சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரான் அரசாங்க அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், இவ்வளவு அதிகமான உயிரிழப்புகளை ஈரானிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
எனினும், உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் மற்றும் எத்தனை பேர் பாதுகாப்புப் படையினர் என்ற தனித்தனி விபரங்களை அவர் வெளியிடவில்லை.
அத்துடன், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் பயங்கரவாதிகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். (a)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .