Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 8 ஆம் திகதி காலமானார்.
தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேபாள அரசானது கடந்த 10 ஆம் திகதி முதல் 12-ஆம் திகதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .