2025 ஜூலை 05, சனிக்கிழமை

காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 94 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

Editorial   / 2025 ஜூலை 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை (02) இரவு நடத்திய வான்வழி தாக்குதலில், உதவிபெற காத்திருந்த 45 பேர் உட்பட 94 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் தீவிரவாதிகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவர்களை விடுதலை செய்துவிட்டு இருதரப்பும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். காசாவில் 60 நாள் சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதை ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கூறினார்.

ஆனால், ஹமாஸ் அமைப்​பினர் இதை ஏற்​றுக்​கொள்​ளாமல், உண்​மை​யான சண்டை நிறுத்​தத்​துக்கு இது வழி​வகுக்​குமா என கேள்வி எழுப்பி வரு​கின்​றனர். இதனால் காசா​வில் இஸ்​ரேல் ராணுவம் தனது தாக்​குதலை தொடர்​கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .