S.Renuka / 2026 மார்ச் 05 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசின் புதிய திட்டங்களின்படியே குறித்த கட்டணங்கள் உயர்வடைய உள்ளது.
ஜனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிமேல் கடவுச்சீட்டு கட்டணங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மார்ச் 31 முதல் கனடிய கடவுச்சீட்டு கட்டணம் 2.7% அதிகரிக்கிறது. இது 2024 ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் உயர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மேலும் கனடாவிற்குள் விண்ணப்பிக்கும் 5 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் 123.24 டொலராகவும் கனடாவிற்கு வெளியே விண்ணப்பிக்கும் 10 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் $267.02 டொலராகவும் இருக்குமெனவும் இது ஆரம்ப கட்ட உயர்வு மட்டுமே என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில்,
தற்போதைய அடிப்படை கட்டண அமைப்பு மட்டும் கடவுச்சீட்டு திட்டத்தின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
கடைசியாகக் கட்டணங்களில் பணவீக்கம் கணக்கில் எடுத்ததிலிருந்து, நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் 14.5% உயர்ந்துள்ளது. இதனால் 2024–25 நிதியாண்டில் செலவுகள் வருமானத்தை விட சுமார் $121 மில்லியன் அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கடவுச்சீட்டு கட்டண அமைப்பு முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையான செயல்பாட்டுச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்காலத்தில் மேலும் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
1 hours ago