Freelancer / 2022 மார்ச் 01 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது.
'இன்று காலை கார்கிவ் நகரில் ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (R)

15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago