Editorial / 2026 பெப்ரவரி 13 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

எல்லாப் புகையிலைப் பொருள்களுக்கும் இன்றுமுதல் 20% வரி உயர்கிறது.2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அது அறிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் புகையிலைப் பொருள்களுக்கும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் புகையிலைப் பொருள்களுக்கும் வரி உயர்வு பொருந்தும்.
இனி ஒரு சிகரெட்டின் விலை சுமார் 10 காசு உயரும். சுருட்டுக்கும் அதே கதிதான்.
புகையற்ற புகையிலைப் பொருள்கள்: 1 கிலோவின் விலை 378 வெள்ளியிலிருந்து 454 வெள்ளியாக அதிகரிக்கும்.
2018இல் புகையிலைப் பொருள்களுக்கான வரி 10 சதவீதம் உயர்ந்தது. பின்பு 2023இல் அது 15 சதவீதமான அதிகரித்தது.
புகைபிடிக்கும் பழக்கத்தைத் தடுக்க இது உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago