2026 பெப்ரவரி 12, வியாழக்கிழமை

துருக்கி நாடாளுமன்றத்தில் மோதல்

Freelancer   / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், கைகலப்பாக மாறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமைச்சரவை மாற்றத்தின் போது சர்ச்சைக்குரிய ஒருவரை நீதி அமைச்சராக நியமித்தமையே இந்த மோதலுக்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

துருக்கி ஜனாதிபதி ரையிப் எர்டோகன், இஸ்தான்புல் தலைமை அரச சட்டத்தரணியான அகின் குர்லெக்கை புதிய நீதி அமைச்சராக நியமித்திருந்தார்.

குர்லெக் நாடாளுமன்றத்தில் பதவியேற்பதைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முற்பட்ட போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் காணொளிகளில் பதிவாகியுள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X