2024 ஜூலை 27, சனிக்கிழமை

பெண் பிரதமர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர் பொலிஸாரால் கைது

Freelancer   / 2024 ஜூன் 09 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மர்ம நபரால் தாக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய மர்ப நபரை பொலிஸார் கைது செய்தனர்.

டென்மார்க் நாட்டின் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன். இவர் கடந்த சனிக்கிழமை, கோபன்ஹேகன் சதுக்கத்தில் ஒரு நபரால் தாக்கப்பட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக பொலிஸார் விரைந்து செயல்பட்டு பிரதமரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவரை கைது செய்த பொலிஸார், இந்த தாக்குதலில் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனுக்குகாயம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்கள்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டு இருந்தாலும், அவரைப்பற்றிய விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் டேன்ஸ் வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .