2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பற்றியெரிந்த சூதாட்ட விடுதி: 19 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்போடியாவில் சூதாட்ட விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

கம்போடியாவின் பாய்பட் நகரிலுள்ள சூதாட்ட விடுதியொன்றில் கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு, திடீரென பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

 இதனையடுத்து , சுமார் 300 பொலிஸார் மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .