2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மலேசிய முன்னாள் பிரதமருக்கு எதிரான மேல்முறையீடு நிராகரிப்பு

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் (Najib Razak) சாதகமாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவர் தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்கும் அரச ஆவணம் இருப்பதாகச் சொல்கிறார்.

அந்த ஆவணத்தை அவர் கோர முடியாது என்று சொல்லி அரசுத் தரப்பு வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் அரசுத் தரப்பின் வாதத்தை நிராகரித்துவிட்டது.

நஜிப் அந்த அரச ஆவணம் உண்மையானதா என்பது குறித்துத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்காடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நஜிப் 1MDB ஊழல் தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறையில் இருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .