2025 மே 19, திங்கட்கிழமை

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது?

Ilango Bharathy   / 2022 மே 03 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானில்  அண்மையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.

இதனையடுத்து புதிய பிரதமராக ‘ஷபாஸ் ஷெரீப்‘ பதவியேற்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அண்மையில் சவுதி அரேபியா சென்றிருந்தபோது, அங்கு இம்ரான்கானின் ஆதரவாளர்கள் ஷபாஸ் ஷெரீப்பை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் ஷபாஸ் ஷெரீப்பை ‘திருடர்’, ‘துரோகி’ என கூறி கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பான வீடியோகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் இம்ரான்கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்  பலர் உட்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் இம்ரான்கானுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X