2025 மே 19, திங்கட்கிழமை

ஹரி போட்டர்‘ எழுத்தாளருக்குக் கொலை மிரட்டல்

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல எழுத்தாளர் ‘சல்மான் ருஷ்டி‘  மீது அமெரிக்காவில் நியூயோர்க் நகரில்  கடந்த 12 ஆம் திகதி  மர்ம நபர் ஒருவரினால் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத் தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான்  தீவிர சிகிச்சைப்  பிரிவில்  சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  தாக்குதல் நடத்திய  நபரைப்  பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,ஹரி போட்டர் எழுத்தாளரான   ஜேகே ரவ்லிங் , ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  ”இது  அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணர்கின்றேன். அவர் நலமுடன் இருக்கட்டும்' எனப் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஜேகே ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்துபதிவிடும் பகுதியில், ‘மீர் ஆசிப் அஜீஸ்‘  என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், 'கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்' எனக்  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இச்சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X