Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 23 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
டயலொக்கால் நடாத்தப்பட்ட யாழ். மாவட்ட அணிகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண கரப்பந்தாட்டத் தொடரில், ஆண்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியும் பெண்களில் காங்கேசந்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகமும் சம்பியனாகின.
ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று மின்னொளியில் நடைபெற்ற குறித்த தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், புத்தூர் கலைமதி அணியை எதிர்கொண்ட ஆவரங்கால் இந்து இளைஞர் அணி போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை 25-21, 25-20, 25-19 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனாகியது.
இதேவேளை, அதே மைதானத்தில் நேற்று மின்னொளியில் இடம்பெற்ற குறித்த தொடரின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கோப்பாய் கே.எம்.வி விளையாட்டுக் கழகத்தை காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் எதிர்கொண்டது.
குறித்த போட்டியின் முதலாவது செட்டை, 25-08 என்ற புள்ளிகள் கணக்கில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் வென்றது. ஆனால், இரண்டாவது செட்டை 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கோப்பாய் கே.எம்.வி விளையாட்டுக் கழகம் பதிலடி கொடுத்தது. எனினும், அடுத்த இரண்டு செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம், 25-22, 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சம்பியனாகியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago