Shanmugan Murugavel / 2022 ஜனவரி 24 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண உலமாக்கள் மற்றும் ஹாபிழ்களுக்கான விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் நிந்தவூர் காஷிபி விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் றியல் ஸ்டார் உலமாக்கள் அணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒன்பது அணிகள் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று ஹபீபியா விளையாட்டுக் கழகத்தை வென்றே காஷிபி சம்பியனாகியிருந்தது.
இப்போட்டியின் நாயகனாக அல்ஹாபிழ் ரிப்தாஸும், தொடரின் நாயகனாக மௌலவி அஸாம் காஷிபியும் தெரிவுசெய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .