Editorial / 2025 ஜூன் 09 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாய்வான் பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி உட்பட இரண்டு பதக்கங்களை இலங்கை வென்றெடுத்தது. தாய்வான் சைனீஸ் தாய்ப்பே தேசத்தில் அமைந்துள்ள தாய்ப்பே நகரில் வார இறுதியில் இப்போட்டிகள் நடைபெற்றன.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் 56.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த டில்ஹானி லேக்கம்கேவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.38 செக்கன்களில் சமோத் யோதசிங்க நிறைவு செய்து மூன்றாம் இடத்தைப் பெற்றார். முதலாவது தகுதிகாண் சுற்றை 10.29 செக்கன்களில் சமோத் யோதசிங்க நிறைவு செய்திருந்த போதிலும் இறுதிப் போட்டியில் அவரது நேரப் பெறுதி 3ஆவது இடத்தையே பெற்றது.
ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றிய இலங்கையின் லெசந்து அர்த்தவிது 2.05 மீற்றர் உயரத்தைத் தாவி கடைசி இடமான 6ஆவது இடத்தைப் பெற்றார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago