R.Tharaniya / 2025 மே 08 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வீரத்திடல் அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி திங்கட்கிழமை (05) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.எம். முனாஸிர் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் பீ.எம்.வை.அறபாத் பிரதம அதிதியாக வும், பிரதிகல்விப் பணிப்பாளர்களான எச்.நைரூஸ்கான், ஏ.ஏ.சியாத், ஏ.முஸ்தக் ஆகியோர் கௌரவ அதிதி களாகும்,
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி சீ.எம்.ஹலீம் சிறப்ப திதியாகவும் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளுடன் போட்டி நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளதுடன் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளினால் சான்றிதழ் மற்றும் பரிசுபொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.
றிபாஸ்




7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
22 Nov 2025
22 Nov 2025
22 Nov 2025