.jpg)
அண்மையில் நடைபெற்ற 24ஆவது வருடாந்த ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின்; 'நவீன் பியதிஸ்ஸ' சவால் கிண்ணத்தை ரவிந்து லக்சிறியும், 19 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவின் 'நிராஷா குருகே' சவால் கிண்ணத்தை மிஹிலிய மெத்சரனியும் வென்றனர்.
ரவீன் நாணயக்கார மற்றும் வசுந்தரா சுவாரிஸ் ஆகியோர் முறையே போட்டித்தொடரின் அதிசிறந்த ஆண் மற்றும் பெண் விருதினை வென்றனர். இப்; பரிசளிப்பு நிகழ்வானது சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகேவின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.
இப் பரிசளிப்பு நிகழ்வில் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், 'தொடர்ச்சியாக 6ஆவது ஆண்டாக கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியதையிட்டு பெருமையடைகிறோம். குழந்தைகளுக்கு தமது முழு திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பினை வழங்கியது எமது பாக்கியமாகும். இளம் ஸ்கொஷ் வீரர்களிற்கு சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான மைல்கல்லாக இப்போட்டிகள் விளங்குகிறது' என்றார்.
'இப் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி வழங்கிய அனுசரணையை பாராட்டுகிறோம். இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வயதுப் பிரிவினரும் மிகவும் போட்டித்தன்மையுடன் விளையாடியதுடன், நான்கு மற்றும் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன' என SLSF இன் தலைவர் கொமதோர் பாலித வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ரிட்ஸ்பரி தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகள் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு தமிழ் யூனியன் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
.jpg)