2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பூப்பந்தாட்ட போட்டியில் உள்ளூராட்சி அணி சம்பியன்

Super User   / 2013 டிசெம்பர் 21 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரு.நாதன்

வட மாகாண அமைச்சுக்களுக்கு இடையிலான பூப்பந்தாட்ட போட்டியில் உள்ளூராட்சி அணி சம்பியனாகியது. மாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் தற்போது யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

உள்ளக போட்டிகள் மற்றும் மைதான போட்டிகள் ஆகியவற்றினை உள்ளடக்கிய மேற்படி சுற்றுப்போட்டியில் பூப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை யாழ்.மணிக்கூட்டு வீதியிலுள்ள பூப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றன.

ஆண்களுக்கான பூப்பந்தாட்ட இறுதி போட்டியில் கல்வி அமைச்சு அணியும் உள்ளூராட்சி அணியும் மோதியன. இதில் உள்ளூராட்சி அணி 3:0 என்னும் நேர் செற் கணக்கில் வெற்றி பெற்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆளுநர் செயலக கொத்தணி அணியும் உள்ளூராட்சி அணியும் மோதின. இதில் உள்ளூராட்சி அணி 3:2 என்ற செற் கணக்கில் வெற்றிபெற்றது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X